டிஎன்பிஎஸ்சி குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு அதிகபட்சமற்றும் குறைந்தபட்ச கல்வி தகுதியை 3 மாதங்களுக்குள் நிர்ணயிக்க தமிழ்நாடு அரசிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளைஉத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வு எழுதி தேர்வானப் பிறகு பிஇ படித்திருந்தால் அந்த வேலை கிடைக்காமல் போனதை அடுத்து ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மனுவில் தனக்கு உரிய தகுதியுடைய அரசுப் பணியை வழங்கும்படி உத்தரவிடுமாறு மனுதாரர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், 'அரசு பணிக்கு தேர்வான கூடுதல் கல்வி தகுதி உடையவர்களை அதிகாரிகள் வேலை வாங்க தயக்கம் காட்டிவருகின்றனர்.
ஆகவே இது போன்ற அரசு துறை பணிகளுக்கு தமிழ் நாட்டு அரசின் நிர்வாக துறை செயலாளர் குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச கல்வி தகுதியை 3 மாத காலத்திற்குள் நிர்ணயிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி நீதிபதிமனுவை தள்ளுபடி செய்துள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..