சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்குகளை ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு வருமான வரித்துறை அறியுறுத்தி இருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது 2019-2020 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2018-2019 நிதியாண்டு) வருமான வரி தாக்கல் காலக்கெடு 2019 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் வரி செலுத்துவோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
எனவே இந்த முறை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 5,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். அதை மீறினால் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். எனினும் வருமான வரி தக்கல் செய்பவரின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் போது அபராதம் 1,000 ரூபாயாக நிர்ணைக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..