சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்குகளை ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு வருமான வரித்துறை அறியுறுத்தி இருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தற்போது 2019-2020 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2018-2019 நிதியாண்டு) வருமான வரி தாக்கல் காலக்கெடு 2019 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் வரி செலுத்துவோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

எனவே இந்த முறை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 5,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். அதை மீறினால் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். எனினும் வருமான வரி தக்கல் செய்பவரின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் போது அபராதம் 1,000 ரூபாயாக நிர்ணைக்கப்பட்டுள்ளது.


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here