சென்னை: அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கௌரவக் குறைச்சலா? என்று இடைநிலை ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளில் நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி இந்த கேள்வியை எழுப்பினார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சமீபகாலமாக அரசின் முடிவுகளை எதிர்த்து ஆசிரியர்கள் வழக்குத் தொடர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்றும் நீதிபதி பார்த்திபன் குறிப்பிட்டார்.
மேலும், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கௌரவக் குறைச்சலா?
மழலையர் வகுப்பு எடுக்கும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட எந்த பலன்களிலும் மாற்றமில்லை என்று அரசு தெரிவித்திருந்தது.
இதைக் கேட்ட நீதிபதி, அங்கன்வாடி மையங்களில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அங்கு பணியாற்ற உத்தரவிட்டார்.
மேலும், அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்கியிருக்கும் பள்ளிக்கல்வித் துறைக்கு நீதிபதி தனது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.
1 Comments
கௌரவ குறைச்சல்தான்
ReplyDeleteநீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தினால் அரசின் அதிகமான வருமானம் அதிகமாக செலவழிகிறது என்ற காரணத்தினால் நீங்கள் குமாஸ்தா பணியை ஏற்பீர்களா பதில் கூறுங்கள் நீதிபதிகளே....
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..