🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்-341

அதிகாரம் : துறவு

 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
 அதனின் அதனின் இலன்.

பொருள்:

ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

பிறருக்காக சிறிதளவு நன்மை செய்தாலும் பலமான சிங்கத்திற்கு நிகரான ஆற்றல் பெறுவீர்கள்.
 - சுவாமி விவேகானந்தர்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

துருப்பிடிப்பதை விட தேய்ந்து போவதே மேல்.

Better wear out than rust out.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Eal - ஆங்கில பிரபு
2. Earthquake - பூகம்பம்
3. Echo - எதிரொலி
4. Edge - விளிம்பு

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.ஆசியாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு எது?

 இலங்கை

2. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி யார் ?

 கிரண்பேடி

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. தலையை சீவினால் தாளில் நடப்பான், அவன் யார் ?

 பென்சில்

2. கன்று நிற்க கயிறு மேயுது, அது என்ன ?

 பூசணிக் கொடி

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. A rainbow has seven colours.
2. Somu told sundari about his magic.
3. My sisters dress is pink in colour.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

ஆப்பிள் 

🍎 ஆப்பிள் வருடத்திற்கொரு முறை இலையுதிரும், ரோசாசிடே குடும்பத் தாவரமாகும்.

🍎 ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும்.

🍎 மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது.

🍎 தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப்பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

🍎தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், மதுரை மாவட்டம், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு பகுதியில் ஆப்பிள் சாகுபடி செய்யப்படுகின்றன.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

அங்குலனின் பக்தி

அங்குலன் என்னும் வேடன் எதிரில் எந்த ஒரு விலங்கும் நடமாட முடியாது. சாதுவான பிராணி என்றாலும் கொன்று விடுவான். அப்படிப்பட்ட அங்குலனுக்கும் இறைவன் அருள்புரிந்தார். ஒரு நாள் அங்குலன் தன் வழக்கம்போல் வலைகளை விரித்து விட்டுக் காத்திருந்தான். ஆனால், அன்று ஒரு சின்னஞ்சிறிய அணில் கூட அகப்படவில்லை. பசியோடு பகல்பொழுது போனது காலை முதல் எதுவும் கிடைக்க வில்லை. 

வெறுங்கையோடு வீட்டிற்குப் போனால் மனைவி-பிள்ளைகளின் முகத்தில் எப்படி விழிப்பேன் என நினைத்தவன் இரவு இங்கேயே ஏதாவது ஒரு மரத்தின் மீது தங்கி, காலையில் போக வேண்டியது தான் என்று நினைத்தான். பின் ஒரு மரத்தின் மேலேறி உட்கார்ந்தான். அது வில்வமரம் என்பது அவனுக்குத் தெரியாது. அந்த மரத்தின் அருகில் ஒரு குளம் இருந்தது. 

இரவு நேரத்தில் ஏதாவது விலங்குகள் குளத்தில் நீர் குடிக்க வரும். அடித்து விடலாம் என்ற எண்ணத்தில் தோளில் இருந்த வில்லை எடுத்த அங்குலன் குளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். குளம் தெரியாததாள். மரத்தின் உச்சிக்கு சென்று நன்றாகத் தெரிய வேண்டும் என்பதற்காக முன்னால் கிளைகளில் இருந்த வில்வ இலைகளை எல்லாம் உதிர்த்தான். அவை அனைத்தும் மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. 

அதன் பிறகு குளம் தெளிவாகத் தெரிந்தது. நேரம் போனதே தவிர, ஒரு விலங்கு கூட வரவில்லை. ஆனால், அங்குலனுக்குத் தூக்கம் வந்துவிட்டது. இப்போது பார்த்துத் தூக்கம் வருகிறதே! தூங்கிக் கீழே விழுந்து விட்டால், உணவு தேட வந்த நான், விலங்குகளுக்கு உணவாகி விடுவேனே. தூக்கத்தை விரட்ட என்ன செய்யலாம். என்று எண்ணிய அங்குலன், மரத்தில் இருந்த வில்வ இலைகளைப் பறித்து ஒவ்வொன்றாகக் கீழே போட்டான். அவையெல்லாம் கீழிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. 

பொழுது புலர்ந்தது. ஒரு விலங்கு கூட அகப்பட வில்லை. பகல் முழுவதும் உண்ணாமலும், அதனால் இரவு தூங்காமலும் வீடு திரும்பினான். அந்த நாள் சிவராத்திரி என அறியாமலேயே அங்குலன் செய்த செயல்களை, சிவன், சிவராத்திரி வழிபாடாக ஏற்றுக் கொண்டு அவனுக்கு அருள் புரிந்ததார். அதன் பலனாக சிவகணங்களின் ஒருவனாக ஆகும் பேறு அங்குலனுக்குக் கிடைத்தது. தெரியாமல் செய்தாலும் கூட, நல்ல செயல்களுக்கான நன்மை கிடைத்தே தீரும். 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

🔮அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

🔮ஃபோர்ப்ஸ் இதழினின் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் விராட் கோலி:

🔮சென்னை மாநகராட்சி சார்பில் வாகன கழிவுகளில் இருந்து உலோகச் சிற்பங்கள் செய்யும் பணி தீவிரம்.

🔮தமிழகத்தில் உள்ள நகராட்சி தலைவர் பதவி இடங்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது.

HEADLINES

🔮CAA protests: Keep educational institutions out of politics, urges HRD minister

🔮Bengaluru highest paying city, IT highest paying industry in India: Report.

🔮TN scientist heading Chandrayaan 3 mission known for his technical acumen.

🔮IPL 2020 auction : Youngsters become crorepatis, Hetmyer goes for Rs 7.75 crore.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴