தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 4 - ந்தேதி தொடங்கிய பிளஸ் - 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற
26 - ந்தேதி வரை நடைபெற உள்ளது . இதில் தனித்தேர்வர்கள் , மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 1 - ம் தேதி முதல் 13 ந்தேதி வரை நடத்தப்பட்டு  இதற்கான முடிவுகள் 24 - ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

வழக்கமான மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 15 - ந்தேதி முதல் 25 - ந்தேதி வரை நடைபெற உள்ளது . இவர்களுக்கான தேர்வு முடிவு மே மாதம் 14 - ந்தேதி வெளியிடப்படுகிறது . விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை விடப்படுகிறது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .


Join Telegram& Whats App Group Link -Click Here