தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்டம் ஆள் சேர்ப்பு நிலையம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அறிவித்தவாறு உள்ளது. அந்த வகையில் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், உதவியாளர் (எழுத்தர்) மற்றும் மேற்பார்வையாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant (உதவியாளர்)

பணி: Assistant/ Clerk (உதவியாளர்,எழுத்தர்)

பணி: Supervisor (மேற்பார்வையாளர்)

மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:

1. காஞ்சிபுரம் - 246 - https:// www.kpmdrb.in
2. நாமக்கல் - 62 - https://www.drbnamakkal.net
3. திருப்பூர் - 97 - https://www.drbtiruppur.net
4. கடலூர் - 64 - https://www.cuddrb.in
5. விருதுநகர் -119 - www.vnrdrb.net
6. திருநெல்வேலி - 70 - www.tnvdrb.in
7. தருமபுரி -119 - www.drbdharmapuri.net
8. சேலம் - 166 - https://www.simdrb.in
9. திருச்சி - 181 - www.trydrb.in
10. மதுரை - 136 - www.drbmadurai.net
11. கோவை - 136 - www.cbedrb.in
12. தேனி - 20 https:// www.drbtheni.net
13. திண்டுக்கல் - 111 - https://www.drbdingigul.net
14. தஞ்சாவூர் - 210 - https://www.tnjdrb.in
15. தூத்துக்குடி - 96 - https://tutdrb.in
16. விழுப்புரம் - 108 - https://www.vpmdrb.in
17. திருவாண்ணாமலை - 127 https://www.drbtvmalai.net
18. ஈரோடு - 135 - www.erddrb.in
19. வேலூர் - 164 - www.drbvellore.net
20. கன்னியாகுமரி - 40 - www.kkadrb.in

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது 31.03.2020 மற்றும் 17.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


Join Telegram& Whats App Group Link -Click Here