10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் 'ஆப்சென்ட்' என பதிவிட அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

முன்னதாக, கரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 11 ஆம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகளும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள், வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Join Telegram& Whats App Group Link -Click Here