*நிகழாண்டுக்கான ஜேஇஇ பிரதான (மெயின்) தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டன*
*மாணவர்கள் இதனை ஜேஇஇ.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (jeemain.nic.in) இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்*
*ஐஐடி, என்.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல், கட்டடக்கலை போன்ற துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள ஜே.இ.இ. எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination) நடத்தப்படுகிறது. இதனை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது*
*இந்த ஆண்டு முதல் இந்த தேர்வு இரண்டு முறை நடத்தப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ஜே.இ.இ மெயின் முதல் தேர்வு நடைபெற்றது*
*ஏப்ரலில் ஜே.இ.இ*
*மெயின் இரண்டாவது தேர்வு நடைபெற்றது*
*இந்த இரு தேர்வுகளையும் எழுதியவர்கள் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதனை அடிப்படையாக வைத்து தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்*
*இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் இரண்டாவது தேர்வு ஏப்ரல் 7 முதல் 12 வரையிலான நாள்களில் நடைபெற்றது*
*மாணவர்கள் தேர்வு முடிவுகளை ஜேஇஇ.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (jeemain.nic.in) தெரிந்து கொள்ளலாம்*
*தேர்வு முடிவுகளின்படி மொத்தம் 24 மாணவர்கள் சதம் எடுத்துள்ளனர்*
*இந்த இரு தேர்வுகளையும் மொத்தம் 11 லட்சத்து 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில் 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்*
*தமிழக அளவில் கோவையைச் சேர்ந்த விக்ரம் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். அவர் தேசிய அளவில் 28-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்*
*சென்னையைச் சேர்ந்த கெளரவ பிரகாஷ் தமிழக அளவில் 2-ஆவது இடத்தையும் தேசிய அளவில் 133 இடத்தையும் பிடித்துள்ளார்*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..