புதுடில்லி: பெண்களுக்கு வழங்கப்படுவது போல், ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை அளிக்கும் தனிநபர் மசோதா, பார்லிமென்டின் அடுத்தக் கூட்டத் தொடரில் விவாதத்துக்கு வர உள்ளது.
பெண்களுக்கான பேறுகால விடுமுறையை, 12 வாரத்தில் இருந்து, 26 வாரமாக உயர்த்தும் மசோதா, பார்லிமென்டில் இந்த ஆண்டு நிறைவேறியது.
ராஜிவ் சதவ் :
அதுபோல ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை அளிக்கும் தனிநபர் மசோதா, பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின், ராஜிவ் சதவ், இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தை பராமரிப்பு என்பது, தாய் மற்றும் தந்தை இருவருக்குமே உள்ள கூட்டு பொறுப்பு.குழந்தை பிறப்பின்போது, ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை அளிப்பதன் மூலம், அவர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு ஏற்படும்; இது குழந்தையின் எதிர்காலத்துக்கு சிறப்பானதாக இருக்கும். அதனால், ஆண்களுக்கும் மூன்று மாதங்கள் வரை, சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுமுறை வழங்க வேண்டும்.
32 கோடி ஆண்கள்:
தத்தெடுப்போர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்போருக்கும் இந்த சலுகை அளிக்க வேண்டும். இதன் மூலம், அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றும், 32 கோடி ஆண்கள் பலன் அடைவர். இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. பார்லி.,யின் அடுத்தக் கூட்டத் தொடரில், இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கான பேறுகால விடுமுறையை, 12 வாரத்தில் இருந்து, 26 வாரமாக உயர்த்தும் மசோதா, பார்லிமென்டில் இந்த ஆண்டு நிறைவேறியது.
ராஜிவ் சதவ் :
அதுபோல ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை அளிக்கும் தனிநபர் மசோதா, பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின், ராஜிவ் சதவ், இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தை பராமரிப்பு என்பது, தாய் மற்றும் தந்தை இருவருக்குமே உள்ள கூட்டு பொறுப்பு.குழந்தை பிறப்பின்போது, ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை அளிப்பதன் மூலம், அவர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு ஏற்படும்; இது குழந்தையின் எதிர்காலத்துக்கு சிறப்பானதாக இருக்கும். அதனால், ஆண்களுக்கும் மூன்று மாதங்கள் வரை, சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுமுறை வழங்க வேண்டும்.
32 கோடி ஆண்கள்:
தத்தெடுப்போர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்போருக்கும் இந்த சலுகை அளிக்க வேண்டும். இதன் மூலம், அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றும், 32 கோடி ஆண்கள் பலன் அடைவர். இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. பார்லி.,யின் அடுத்தக் கூட்டத் தொடரில், இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..