புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 1 சதவீத அகவிலைப்படியை கூடுதலாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜூலை, 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும். 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61 லட்சம் ஓய்வூதியர்களும் இதன் மூலம் பலன் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.தனியார் நிறுவன ஊழியர்களின் பணிக்கொடை திருத்த மசோதாவிற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.