ஸ்டாக்ஹோம்: பிரிட்டன் எழுத்தாளர் கசோ இஸிகுராவுக்கு 2017-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு சற்று முன்பு அறிவிக்கப்பட்டது.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக் குழுத் தலைவர் சாரா டேனியல் அதனை அறிவித்தார்.
இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினை பிரிட்டன் எழுத்தாளர் கசோ இஸிகுரா வென்றார். விருதுத் தொகையான ரூ.7 கோடி இவருக்கு வழங்கப்பட உள்ளது
தற்பொழுது 62 வயதாகும் கசோ இஸிகுரா ஜப்பானின் நாகசாகி நகரில் பிறந்தவர்.பின்னர் இங்கிலாந்தில் குடியேறினார். இவர் ஆங்கிலத்தில் ஏராளமான சிறுகதைகள் மற்றும் ஐந்து நாவல்களை எழுதியுள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..