பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் துணைத் தேர்வு நடந்தது.அதில் மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்ய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.
தற்போது அந்த பணிகள் முடிந்து முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ளவர்கள் விவரங்கள் www.tndge.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.