அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் கண்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம்
தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் சிக்கன்னா அரசு கல்லூரியில் அரசு கண்காட்சி டிசம்பர் 3-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் கண்காட்சி நடைபெற்றால் தேர்வுக்கு இடையூறாக இருக்கும் என்று மாணவர் கதிர்வேல் வழக்கு தொடர்ந்தார். கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்ததால் தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. வருங்காலத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கண்காட்சி நடத்த தடை விதித்து உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.*