வரும் மே மாதம் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சி.பி.எஸ்.இ இணை ஆணையர் அறிவித்துள்ளார். 2018- 19-ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக வரும் மே மாதம் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் MBBS சேர்க்கை நடைபெற்று வருகிறது.