🔹 தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, 5 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை; + 1, + 2 க்கு, 13 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை.🔸 கல்வியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று,புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.🔹 அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்,அனந்தகிருஷ்ணன் தலைமையிலான, கலைத்திட்டக்குழு, புதிய பாடத்திட்டத்தை தயாரித்துள்ளது.🔸 முதற்கட்டமாக, வரும் கல்வி ஆண்டில், 1, 6, 9 மற்றும் + 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது.🔹 இதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணி, ஒரு வாரத்திற்கு முன் துவங்கின.🔸 புதிய பாடத்திட்டத்தை, CBSE, பாடத்திட்டத்துக்கு இணையாக, பேராசிரியர் குழுவினர் தயாரித்துள்ளனர்.🔹 மாணவர்கள், மனப்பாட கல்வியை கைவிட்டு, பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்; நுழைவு தேர்வை பயமின்றி எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.🔸 இதற்காக, பழைய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அமலில் இருந்த, 'ப்ளூ பிரிண்ட்' முறை, புதிய பாடத்திட்டத்தில், ரத்து செய்யப்பட்டுள்ளது.🔹 மேலும், சிந்தனைத்திறனை சோதிக்கும் வினா வகைகள், மாணவர்களது புரிந்து கொள்ளும் திறனைஅதிகரிக்கும் வகையிலான அம்சங்கள், புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.