🔹 தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, 5 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை; + 1, + 2 க்கு, 13 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை.🔸 கல்வியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று,புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.🔹 அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்,அனந்தகிருஷ்ணன் தலைமையிலான, கலைத்திட்டக்குழு, புதிய பாடத்திட்டத்தை தயாரித்துள்ளது.🔸 முதற்கட்டமாக, வரும் கல்வி ஆண்டில், 1, 6, 9 மற்றும் + 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது.🔹 இதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணி, ஒரு வாரத்திற்கு முன் துவங்கின.🔸 புதிய பாடத்திட்டத்தை, CBSE, பாடத்திட்டத்துக்கு இணையாக, பேராசிரியர் குழுவினர் தயாரித்துள்ளனர்.🔹 மாணவர்கள், மனப்பாட கல்வியை கைவிட்டு, பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்; நுழைவு தேர்வை பயமின்றி எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.🔸 இதற்காக, பழைய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அமலில் இருந்த, 'ப்ளூ பிரிண்ட்' முறை, புதிய பாடத்திட்டத்தில், ரத்து செய்யப்பட்டுள்ளது.🔹 மேலும், சிந்தனைத்திறனை சோதிக்கும் வினா வகைகள், மாணவர்களது புரிந்து கொள்ளும் திறனைஅதிகரிக்கும் வகையிலான அம்சங்கள், புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 10, +1 மற்றும் +2 வகுப்புகளில் அமலில் இருந்த பொதுத் தேர்வுக்கான 'ப்ளூ பிரிண்ட்' முறை புதிய பாடத்திட்டத்தில் ரத்து செய்யப்பட வாய்ப்பு.
Tags
DSE
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..