சென்னை: பொது தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, மாவட்ட வாரியாக, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மார்ச்சில் பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், பொது தேர்வை முறைகேடுகள் இன்றி நடத்த, 32 மாவட்டங்களுக்கும், சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், சென்னை; மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன், காஞ்சிபுரம்; அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் திருவள்ளூர் மாவட்டங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..