சென்னை: தேர்வு மையமாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளே செல்லக்கூடாது என தேர்வுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
காலை 8.30 மணிக்கு மேல் பள்ளியின் உள்ளே செல்லக்கூடாது என தேர்வுத்துறை இயக்கம் கூறியுள்ளது. பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், பிற பணியாளர்களும் மையத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தின் அனுமதி ரத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக தேர்வுத்துறை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.