திருக்கனுார் : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், திருக்கனுார் பகுதியில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக, 5 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியான திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளன. வாதானுார், செல்லிப்பட்டு, சந்தைப்புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம், கொடாத்துார் ஆகிய அரசு உயர்நிலை பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.இதேபோல், திருக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளி 99.2 சதவீதமும், கூனிச்சம்பட்டு அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி - 95, பி.எஸ்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி - 92, சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி 90.9 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. திருக்கனுார் பகுதியில், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, 5 அரசு உயர்நிலைப் பள்ளிகள் 100 சதவீதமும், மற்ற அரசு பள்ளிகள் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.