டெல்லி: இந்த நூற்றாண்டிலேயே மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சந்திர கிரகணம் இந்தியாவில் ஜூலை 27 ஆம் தேதி இரவு முதல் ஜூலை 28 ஆம் தேதி அதிகாலை வரை நிகழ உள்ளது என புவியியல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்த ஆண்டு சந்திர கிரகணம் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், மீண்டும் ஜூலை 27 ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
இந்த சந்திர கிரகணம் குறித்து இந்திய புவியியல் அமைச்சகம் அறிவித்திருப்பதாவது: இந்த நூற்றாண்டின் மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சந்திர கிரகணம் வரும் 27 ஆம் தேதி பின்னிரவு முதல் 28 ஆம் தேதி அதிகாலை வரை நிகழ உள்ளது. முழு சந்திர கிரகணத்தை இந்தியா முழுவதும் பார்க்கலாம். சந்திர கிரகணத்தின் போது நிலவு சிவப்பாக இருள் படந்து காணப்படும்.
இந்த சந்திர கிரகணம் ஆசியா, ஆஸ்திரேலியா, ரஷ்யாவின் வட பகுதியைத் தவிர, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, கிழக்கு தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய பகுதிகளிலும் இந்த சந்திர கிரகணம் தோன்றும்.
ஜூலை 27, 28 தேதிகளில் நிகழும் இந்த முழு சந்திர கிரகணம் ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் மிக நீண்ட நேரம் நிடிக்கிறது. பொது ஆண்டு 2001 முதல் 2100 வரை இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த, மற்றும் நிகழ உள்ள மொத்த சந்திர கிரணங்களின் நேரத்தை காட்டிலும் இந்த சந்திர கிரகணமே மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரகணம். கிரகணம் ஜூலை 27 ஆம் தேதி பின்னிரவு 11.54 மணிக்கு தொடங்கும் என்று புவியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..