சென்னை : தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. எம்.பி டி.கே ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் காலை 11.00மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்ற கிளை. தமிழுக்கான கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடி என்பதால் மதிப்பெண் வழங்க வழக்கு தொடரப்பட்டது.மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கி தரவரிசை பட்டியல் வெளியிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.