சென்னை: பழைய ஓய்வூதியத்தை
அமல்படுத்த வேண்டும் என நவம்பர் 15-ஆம் தேதி அரசு ஊழியர்கள்
வேலைநிறுத்த போராட்டத்தில்
ஈடுபடவுள்ளனர்.

அரசு பணியாளர்களுக்கு பழைய
ஓய்வூதியத்தை அரசு அமல்படுத்த
வேண்டும்; 21 மாத நிலுவைத்
தொகையை வழங்க வேண்டும்;
அங்கன்வாடி, சத்துணவு, ஊராட்சி
செயலர் பணியிடங்களை
நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, 3 கட்ட
போராட்டங்களில், பணியாளர் சங்கம்
ஈடுபட உள்ளது.

அக்டோபர் மாதம் பிரசார
இயக்கத்தையும் நவம்பர் 10-ஆம் தேதி
திருச்சியில் வேலைநிறுத்த
மாநாட்டையும் நவம்பர் 15-இல் ஒரு
நாள் அடையாள வேலை நிறுத்த
போராட்டம் நடத்த முடிவு
செய்துள்ளனர்.