வாஷிங்டன்:
இந்த ஆண்டின் 3வது சூரிய கிரகணம் இன்று நிகழும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த கிரகணம், பகுதிநேர சூரிய கிரகணம் என்றும், அப்போது சூரியன் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் என்றும் கூறி உள்ளனர்.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 17ந்தேதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் ஏற்பட்டது. பின்னர் பகுதி நேர சூரிய கிரகணம் நிகழ்ந்தது. தற்போது இன்று மீண்டும் பகுதி நேர சூரிய கிரகணம் நடக்க உள்ளது/
இந்த கிரகணம் சுமார் மூன்றரை மணி மணி நேரம் நிகழும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.32 மணிக்கு தொடங்கும் பகுதி நேர சூரியகிரகண நிகழ்வு மதியம் 3.16 மணி வரை நீடிக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது.
இந்த கிரகணம் குறித்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளதாவது,
இன்று நடைபெறும் பகுதிநேர சூரிய கிரகணம்,. வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, வடஅமெரிக்கா வின் வடகிழக்கு பகுதியிலும், ஆசியாவை பொருத்தவரை வடக்கு மற்றும் மேற்கு இருக்கும் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை பார்க்க இயலும் என தெரிவித்துள்ளது. இந்தியாவை பொருத்த வரை தெளிவாக காண இயலாது என்றும் தெரிவித்து உள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..