பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், யோகா பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும்' என, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கூறியுள்ளது. டில்லியில், என்.சி.இ.ஆர்.டி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி பாடத்திட்டத்தில், உடற்கல்வி, விளையாட்டு, யோகா ஆகியவை கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என, என்.சி.இ. ஆர்.டி., தெரிவித்துள்ளது.

ஆறாம் வகுப்பிலிருந்து மாணவ - மாணவியருக்கு, யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; யோகா பயிற்சியுடன், அதன் பயன்களையும், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., மாநில, யூனியன் பிரதேசங்களின், பள்ளி கல்வித்துறைகளுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என, மாநில அரசின் பள்ளி கல்வித்துறையை கட்டாயப்படுத்த முடியாது.இவ்வாறு அவர் கூறினார்