மாணவர்களின் கனவை நனவாக்குவதே
புதிய பாடத் திட்டத்தின் நோக்கம்: பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன்தமிழக மாணவர்களின் கனவை நனவாக்கும் நோக்கிலேயே புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு, வ.உ.சி. மைதானத்தில் ஆக. 3 முதல் ஆக. 14 வரை நடத்தப்படும் 14ஆவது புத்தகக் கண்காட்சியை பள்ளிக்கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக கல்வித் துறையில் கடந்த ஓர் ஆண்டாக, பல முக்கியத் திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. பிற மாநிலங்களில் புதிய பாடத் திட்டத்தைக் கொண்டுவர இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழகத்தில் மாணவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு 9 மாதங்களில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..