7-வது சம்பள கமிஷனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இன்று அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை மோடி அரசு அறிவித்துள்ளது.
7 வது சம்பள கமிஷன் கீழ் 50 லட்சம் ஊழியர்களுக்கு ஊதியக் குழுவில் அகவிலைப் படி 2 சதவிகிதம் வரை உயர்த்தி கொடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இப்போது, 7 வது சம்பள கமிஷன் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் அகவிலைப் படி 7 சதவீதம் பெற்று வருகின்றனர். இனிமேல் அது 9 சதவிகிதமாக பெறுவார்கள். ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அடிப்படையில் அகவிலைப் படி கணக்கிட்டு கொடுக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இந்த சலுகை உயர்வானது அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். இது இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சலுகை உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 6112.20 கோடி ரூபாயும், ஒரு நிதி ஆண்டுக்கு 407.80 கோடி ரூபாயும் கூடுதல் செலவாகும். இது 20013-14 ஆம் ஆண்டை காட்டிலும் அரசுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..