தமிழகத்தில், மேல்நிலை வகுப்பு பொதுத்தேர்வுக்கு, 10 கி.மீ.,க்கு மேல், எந்த தேர்வு மையங்களும் இல்லை,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வரின் ஒப்புதலுக்கு பின், நம் நாடே வியக்கும் வகையில், 1.50 கோடி மரக்கன்றுகள், மாணவர்கள் மூலம் நடப்பட்டு, பராமரிக்கப்படும்.
தமிழகத்தில், மேல்நிலை வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கு, புதிதாக, 750 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்கு முன், 25 கி.மீ., துாரத்தில், தேர்வு மையங்கள் இருந்தன.
தற்போது, 10 கி.மீ., துாரத்துக்கு மேல், தமிழகத்தில் எந்த தேர்வு மையங்களும் இல்லை. பர்கூர் மலைப்பகுதியில், கடைக்கோடியில் வசிக்கும் மாணவர்கள் வசதிக்காக, தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கேள்வித்தாள் முறை, விடைகளுக்கு மதிப்பெண் வழங்கும் முறை விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..