8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் காசிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், "காசிப்பாளையம் பேரூராட்சியில் 300 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், 1.50 லட்சம் மரக்கன்றுகளை நட்டு மாணவர்களே பராமரிக்கும் திட்டத்தை முதல்வர் தொடக்கி வைக்கவுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசின் 25 சதவீத நிதியுதவியுடன் ஸ்மார்ட்மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இன்னும் ஓராடிற்கு பிறகு தமிழக கல்வித்துறை இந்தியா மட்டுமின்றி உலகிற்கே வழிகாட்டியாக திகழும் என கூறினார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..