ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையில், சிறப்பு நிதி உதவி பெறும் பயனாளிகளை கணக்கெடுப்பது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளையும்  அரசு இணைத்துள்ளது. அதில் ஊரக மற்றும் நகர்ப்புறம், வட்டாரம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக பயனாளிகளை கணக்கெடுத்தல், புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்தல், கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டும், சென்னை மாநகராட்சியில், அதன் ஆணையர் தலைமையிலும் குழு அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.