உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து
*அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது*
*ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த மாதம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது*
*இதன் காரணமாக 1500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்*
*போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மீது 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 512 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஆயிரத்து 656 பேர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்*
*மேலும், 4 ஆயிரத்து 871 பேர் நீதிமன்றங்கள் முன்பு ஆஜர்படுத்திய போது, நீதிமன்றங்களால் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்*
*வேலை நிறுத்தம் கைவிடப்பட்டவுடன், நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்ட ஆயிரத்து 656 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்*
*இந்நிலையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..