வருமான வரியை சேமிக்க/ வருமான வரி விலக்கு பெற பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கிய 5 முறைகளை பார்க்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் :
ELSS (Equity Linked Saving Scheme)- சேமிப்பின் மூலம் 3 வருடங்கள் வரை ஒரு லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.
இதில் முதல் 3 வருடங்களில் சேமித்த தொகையை எடுத்து மீண்டும் ELSS சேமிப்பில் முதலீடு செய்யலாம். 3 வருடங்கள் என்ற குறைந்த கால அளவு இருப்பதால் இதனை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
அதேபோன்று PPF (பொது வருங்கால வைப்பு நிதி) -இல் வட்டி விகிதம் (8%) மிகவும் அதிகம் என்பதால் சிறந்த பாதுகாக்கப்பான சேமிப்பு முறையாகும்.
தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme):
பிரிவு 80சியின் மூலம் ரூ.1.5 லட்சம், பிரிவு 80சிசிடி மூலம் ரூ.50,000 என மொத்தம் 2 லட்சம் ரூபாய் வரை வருமானவரி விலக்கு பெறலாம்
சுகாதாரக் காப்பீடு (Health Insurance)
தனி நபருக்கோ அல்லது குடும்பத்தில் உள்ள அனைவருக்குமோ, ஆயுள் காப்பீடு செய்தால் அவற்றிற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
பிரிவு 80டி-யின் படி, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரூ.25,000 வரையிலும்,60 வயதுக்கு அதிகமான பெற்றோர்களுக்கு ரூ.50,000 வரையிலும் வரிவிலக்கு பெறலாம்
டெர்ம் இன்சூரன்ஸ்:
இது குறிப்பிட்ட கால அளவு காப்பீடாகும். இதற்கான ப்ரீமியம் தொகை மிகவும் குறைவே. எனவே தனிப்பட்ட நபர் அல்லது தனது குடும்பத்திற்கு இந்த காப்பீட்டை எடுக்கலாம்.
இதில் 15-20 வருடங்கள் என்ற குறைந்த கால காப்பீடை எடுத்துக்கொள்ளலாம்.
அல்லது 60-65 வயது வரையிலான நீண்ட கால காப்பீடை எடுக்கலாம்.
தோராயமாக ரூ.1 கோடிக்கு 30 ஆண்டுகால காப்பீட்டில் மாதத்திற்கு ரூ. 700 முதல் 800 வரை செலுத்த வேண்டியிருக்கும்.
நன்கொடை :
நாம் நன்கொடை வழங்கும் தொகை மற்றும் நிறுவனத்தை பொறுத்தது வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. பிரிவு 80ஜி-யின் படி, நாம் வழங்கும் நன்கொடை தொகைக்கு 50% முதல் 100% வரை வரி விலக்கு கிடைக்கும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..