ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி attendance app ல் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.
பள்ளிப் பார்வை என அலுவலகத்தில் எழுதி வைத்து விட்டு ஆசிரியப் பயிற்றுநர்கள் தன் சொந்த வேலைகளைப் பார்க்கச் சென்று விடுவதாக எழுந்த புகாரை அடுத்து அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி ஆன்லைனில் உள்ள ஆப்பில் தான் பதிவு செய்ய வேண்டும் ...
தான் செல்வதாக எழுதி வைத்து விட்டுச் செல்லும் பள்ளிகளிலிருந்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வருகையை தனது மொபைலில் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவ்வாறு பதிவு செய்யும் போது அப்பள்ளி அமைந்திருக்கும் location உயர் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.
எனவே இனி பள்ளிப் பார்வை என எழுதி வைத்து விட்டு தன் சொந்த வேலைகளைப் பார்க்கச் செல்வது பெருமளவு குறையும் என அரசு எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..