மாநில அளவில் 21 வயதிற்குட்பட்டவர்கள் கலந்து கொண்ட முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த 566 மாணவர்களுக்கு 4 .25 கோடி ரூபாய் பரிசுத்தொகை இந்த ஆண்டு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் 1000 மாணவர்களை தேர்வு செய்து தனியார் கல்லூரிகள் மூலம் பயிற்சி மற்றும் படிப்பிற்கு உதவி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு காசோலை வழங்குதல், மற்றும் சர்வதேச அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வெல்லும் திட்ட துவக்க விழா நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் மாநில அளவில் 21 வயதிற்குட்பட்டவர்கள் கலந்து கொண்ட முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த 566 மாணவர்களுக்கு 4.25 கோடி ரூபாய் பரிசுத்தொகை இந்த ஆண்டு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். Hi
மேலும், பள்ளி அளவில் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் 100 அரசு பள்ளிகளில் விளையாட்டு அரங்கங்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் அமைக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் அதற்காக 100 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் விளையாட்டில் சிறந்து விளங்கும் 1000 மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி மற்றும் படிப்பிற்கு உதவ 30 கல்லூரிகள் முன்வந்துள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..