*தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் மே முதல் வாரம் முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது*

*தமிழக வனத்துறையில் காலியாக இருந்த வனவர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனவர் பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டது. தற்போது, காலியாக உள்ள வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்*

*இதில், பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் பி்ரிவினரை கொண்டு 465 காலிப்பணியிடமும், தனியாக மலைவாழ் இனத்தவரைக்கொண்டு 99 காலிப்பணியிடமும் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும்*

*பொது பிரிவினருக்கு வயது தகுதியாக 1.7.2019ம் தேதியில் 21 முதல் 30க்குள்ளும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர் மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 21 முதல் 35க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்*

*திருநங்கைகளுக்கு உரிய சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. உடற்தகுதியாக ஆண்கள் 163 செ.மீ. உயரமும், பெண்கள், திருநங்கைகள் 150 செ.மீ. உயரமும் இருத்தல் வேண்டும்*

*இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் மே முதல் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மே மூன்றாவது வாரம் விண்ணப்பிக்க கடைசி நாளாகும்*

*கணினி மூலம் ஆன்லைன் எழுத்துத்தேர்வு ஜூன் 4வது வாரத்தில் நடக்கிறது. 100 மதிப்பெண்ணுக்கு 3 மணி நேரம் இத்தேர்வு நடத்தப்படுகிறது*

*இதுதொடர்பாக தகவல்களை அறிய www.forests.tn.gov.in என்ற முகவரியில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது