12 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு தற்போது தேர்வு நடந்து வரும் நிலையில், அடுத்தாண்டு முதல் அதனை 500 ஆக குறைக்க பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
12 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு தேர்வுகள் 600 மதிப்பெண்களில் நடந்தது.
இந்நிலையில், தற்போது 600 மதிப்பெண்ணை 500 ஆக குறைக்க பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், 12 மற்றும் 11-ம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்தால் போதும்.
மேலும், 12 மற்றும் 11-ம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்தால் போதும்.
10-ம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 1 மற்றும் 2-ம் தாள் நீக்கப்பட்டு, ஒரே பாடமாக தேர்வு நடத்தப்பட உள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த பரிந்துரை பள்ளிக்கல்வியில் இருந்து தமிழை அகற்றும் முயற்சி என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
. 11, 12ம் வகுப்புகளில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
1 Comments
I5s good for future
ReplyDeletePost a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..