பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 200 பேர் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர்.


2019-20 கல்வியாண்டில் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் நடத்தப்படும் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு ஜூன் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது.

 அன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும், ஜூன் 21 இல் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், ஜூன் 22 இல் விளையாட்டு பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.


ஜூலை 3 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும்.
இதற்கான விண்ணப்பப் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கியது.

பதிவு செய்ய ஒரு வார காலமே உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை வரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 200 பேர் ஆன்-லைன் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள்
தெரிவித்தனர்



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here