இந்திய ராணுவத்தில், 42-வது தொழில்நுட்ப நுழைவுத்திட்டத்தில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் வாய்ந்த ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சித் திட்டம்:
42-வது தொழில்நுட்ப நுழைவுத்திட்டம்
காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 90 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 10.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2019
வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 16 1/2 வயது முதல் அதிகபட்சமாக 19 1/2 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
அத்துடன் 01.07.2000 முதல் 01.07.2003-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் பயின்று குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், www.joinindianarmy.nic.in/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எஸ்.எஸ்.பி மூலம் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என்ற இரு நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பயிற்சி காலம்: 5 வருடங்கள்
பதவி உயர்வு:
பயிற்சிக்கு பின் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற வாய்ப்புண்டு.
மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற,
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/tes_42.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்க்கலாம்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..