இந்திய ராணுவத்தில், 42-வது தொழில்நுட்ப நுழைவுத்திட்டத்தில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் வாய்ந்த ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சித் திட்டம்:
42-வது தொழில்நுட்ப நுழைவுத்திட்டம்

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் = 90 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 10.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2019

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 16 1/2 வயது முதல் அதிகபட்சமாக 19 1/2 வயது வரையும் இருத்தல் வேண்டும்.

அத்துடன் 01.07.2000 முதல் 01.07.2003-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் பயின்று குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், www.joinindianarmy.nic.in/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:
எஸ்.எஸ்.பி மூலம் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என்ற இரு நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பயிற்சி காலம்: 5 வருடங்கள்

பதவி உயர்வு:
பயிற்சிக்கு பின் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற வாய்ப்புண்டு.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற,
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/tes_42.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்க்கலாம்.