புதிய பாடத் திட்டங்கள் தொடங்கி கற்பித்தல் முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு படிக்கின்ற மாணவர்கள்- ஆசிரியர் விகிதாச்சார முறை மாற்றப்பட்டுள்ளது.இதுவரையில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நிர்ணயிக்கப்பட்டு கற்பித்தல் நடைபெற்றது. இப்போது 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் மூலம் அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் இதுபற்றி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பிளஸ்-1 வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. புதிய வகுப்புகளில் மாணவர்கள் புதிய விகிதாச்சார அடிப்படையில் கற்பித்தல் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் விகிதாச்சாரம் கற்பித்தல்-கற்றலை பெரிதும் பாதிக்கும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-




தற்போது புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு எடுத்து சொல்வதில் ஆசிரியர்களுக்கு மிகுந்த சிரமம் ஒருபுறம் இருந்தாலும் கற்கும் மாணவர்களுக்கு வகுப்பறை சூழல் கூட்டத்தில் பங்கேற்பது போன்று தோன்றும்.ஒரு வகுப்பறையில் 60 மாணவர்கள் என்பது இட நெருக்கடி மட்டுமின்றி மாணவர்களுக்கு ஆரோக்கியமான சூழல் இல்லாமல் ஒருவிதமான இறுக்கம் ஏற்படும்

அரசின் பாடத்திட்டம் சிறப்பாக அமைத்து விட்டு அதனை எடுத்து செல்லும் வழி சரியாக அமையாவிட்டால் பயனற்று போகும்.போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இருக்கும் பாடங்களை எளிமையாக எடுத்து செல்ல மாணவர்கள்- ஆசிரியர் விகிதம் குறைத்தால் மட்டுமே சிறப்பு பெறும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விகிதாச்சாரத்தை குறைத்திட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்




Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here