புதுக்கோட்டை,ஜீன்.9: புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில்  ஆசிரியர் தகுதித் தேர்வு  இரண்டாம் தாள்  தேர்வினை 9408 பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினார்கள்.விண்ணப்பித்தவர்களில் 1082 பேர் தேர்வெழுத வரவில்லை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறினார்.

புதுக்கோட்டை கல்வி மாவட்டம் பெருங்களூர் அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மையத்தை பார்வையிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது:இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் புதுக்கோட்டை வருவாய் கல்வி மாவட்டத்தில் மொத்தம் 33 தேர்வு மையங்களில் 9408    பேர் முதல் தாள் தேர்வினை
எழுதினார்கள்.விண்ணப்பித்தவர்களில் 1082 பேர் தேர்வெழுதவரவில்லை.


இதில்  அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கீரமங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,ஆவுடையார் கோவில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,சுப்ரமணியபுரம்,அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,திருவரங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி,கொத்தமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,மணல்மேல்குடி அரசினர் ஆண்கள் மேல்நிலைபரபள்ளி,லெட்சுமிநரசிம்மபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி   ஆகிய 9 மையங்களில்  மொத்தம் 2766 பேர் தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனர்.இதில் 298 பேர் தேர்வெழுத வரவில்லை.2468 பேர் தேர்வெழுதினார்கள்.



அதே போல் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் ஒரே தேர்வு மையமான கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,விராலிமலை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,பொன்புதுப்பட்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 3 மையங்களில்  924 பேர் தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனர்.இதில் 76 பேர் தேர்வெழுத வரவில்லை.848 பேர் தேர்வெழுதினார்கள்.

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,அரிமளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி,சிவபுரம் கற்பகவிநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,திருக்கோகர்ணம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ,புதுக்கோட்டை அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை டி.இ.எல்.சி மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை வைரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,பெருங்களூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி,திருமயம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கந்தர்வக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கறம்பக்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை திரு இருதய மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை மௌண்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,கந்தர்வக்கோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,புத்தாம்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை அருள்மிகு பிரகாதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி,திருமயம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,நச்சாந்துபட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி,கந்தர்வக்கோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 21மையங்களில் மொத்தம் 6800 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்..இதில் 708 பேர் தேர்வெழுத வரவில்லை.6092 பேர் தேர்வெழுதினார்கள்.

மேலும் தேர்வெழுதுபவர்கள் காப்பியடித்தல் போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.செல்போன்,கால்குலேட்டர் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொண்டு செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது .மேலும் தேர்வு பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here