இன்று 30.06.2019 அன்று சென்னை சிங்கபெருமாள்கோவில் RMN அரங்கில் தமிழ்நாடு டிஜிட்டல் டீம் மற்றும் ஆசிரியர்.நெட் இணைந்து நடத்திய தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழாவில் திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மேலகண்டமங்கலம் நடுநிலைப்பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி கணேசன், வல்லூர் நடுநிலைப்பள்ளிப் பட்டதாரி தலைமை ஆசிரியை திருமதி ப.ஜோதி, கோவிந்தநத்தம் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி ஆ.வளர்மதி ஆகியோருக்கு, தமிழ்நாடு தொடக்கக்கல்வித் துணை இயக்குநர் திருமிகு. கே.குணசேகரன் மற்றும் SCERT உதவிப் பேராசிரியர் முனைவர் இர. ஆசீர் ஜூலியஸ் ஆகியோர் *ஒளிரும் ஆசிரியர்* விருது வழங்கி வாழ்த்திப் பாராட்டினர்.
மேலும், இவ்விருது வழங்கும் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினர்களாக புதிய தலைமுறை கல்வி இதழ் உதவி தலைமை ஆசிரியர் மோ.கணேசன், தேசிய விருதாளர்கள் திலீப் ராஜ், கருணைதாஸ், சங்கர், சைமன் பீட்டர் பால் மற்றும் காஞ்சிபுரம் தமிழ்ப்பிரியன் முதலானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு டிஜிட்டல் டீம் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப.இரமேஷ் மற்றும் ஆசிரியர்.நெட் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். ஏழை எளிய குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு மேன்மேலும் பாடுபட இது போன்ற விருது ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக விருதாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..