பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் குறித்த கல்வி அளிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசியஅமைச்சர் செங்கோட்டையன், "தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் திட்டத்தைநாளை மறுநாள் முதல்வர் துவக்கி வைக்கிறார்.
பள்ளி மாணவர்கள், புதிய பஸ் பாஸ் பெறும் வரைபழைய பஸ் பாஸ்களையே பயன்படுத்தலாம்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2 லட்சம் அதிகரித்துள்ளது. அதாவது 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.இதன்மூலம் வருங்காலத்தில் தமிழகத்தில் கல்வியறிவு விகிதம் அதிகரிக்கும்


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here