குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் நடத்தப்படும் குரூப் 1 தேர்வில் சார் ஆட்சியர்,உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசின் உயர் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்படும்.இந்த தேர்வை பொருத்தவரை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகு பணியமர்த்தப்படுகின்றனர்.

அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் 12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 181 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகளை http://tnpsc.gov.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னை பாரிமுனையில் அமைத்துள்ள நேர்காணல் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.