🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 432

அதிகாரம் : குற்றங்கடிதல்

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா 
 உவகையும் ஏதம் இறைக்கு.

பொருள்:

பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

குழந்தைகளின் புன்சிரிப்பைத் தொடர்ந்து தக்க வைக்கக் கூடிய கற்பனை வளமிக்க அறிவார்ந்த கல்வியை நாம் உருவாக்க வேண்டும்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

A cracked bell never sound well.

உடைந்த சங்கு பரியாது.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Detect - உளவறி
2. Devil - பேய், தீய ஆவி
3. Dew -  பனித்துளி
4. Diagram - விளக்க வரை படம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. கொலம்பியா விண்கலத்தில் இறந்த இந்தியப் பெண் விஞ்ஞானி யார் ?

 கல்பனா சாவ்லா

2. திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?

 சென்னிமலை

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும், அது என்ன ?

 ஆமை

2. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை, அது என்ன ?

 வழுக்கை

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. The car is near the tree.
2. Your hat looks very nice.
3. Open the door, please.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

சப்போட்டா

🍋 சப்போட்டா வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

🍋 மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.

🍋 கடல்வழியே இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள் மூலம் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

🍋தற்போது உலக அளவில் இந்தியாவில் தான் சப்போட்டா பழம் அதிக அளவு உற்பத்தி ஆகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

முல்லா ஏன் அழுதார்

ஒரு நாள் முல்லா தனியே அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அதைப் பார்த்த அவருடைய நண்பர் முல்லாவிடம் ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்.

அதற்கு முல்லா சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பாவும் இருபது லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். எனது அத்தை சென்ற வாரம் எனக்கு 30 லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு அவரும் இறந்துவிட்டார். எனது தாத்தா மூன்று நாட்களுக்கு முன் 50 லட்சம் ரூபாயை இறக்கும் முன் எனக்கு எழுதி வைத்துவிட்டார் என்று கூறிவிட்டு, மேலும் முல்லா அழுகையை நிறுத்தாமல் அழுதுக்கொண்டே இருந்தார்.

அதற்கு நண்பர் உனக்கு கிடைத்த இவ்வளவு ரூபாய்களை வைத்து சந்தோஷப்படாமல் ஏனப்பா அழுகிறாய்? என்று கேட்டார். அதற்கு முல்லா, நண்பரிடம் இனிமேல் சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து போவதற்கு எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் யாரும் இல்லை என்பதை நினைத்து அழுதுகிட்டு இருக்கேன் என்றார். முல்லா சொன்னதை கேட்ட நண்பர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.

நீதி :
பிறர் நமக்கு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮நியுசிலாந்து ரவுல் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

🔮ரபேல் போர் விமானம் இருப்பதால் இனி தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்க நாம் பாகிஸ்தானுக்குள் செல்ல தேவையில்லை. இந்தியாவில் இருந்தபடியே அவற்றை அழித்து விடலாம் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

🔮தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

🔮வெஸ்ட் இண்டீஸ் உடனான இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்திய அணி 387 ரன்கள் குவிப்பு.

🔮உலகளவில் அறிவியல் கட்டுரைகளை அதிகளவு வெளியிடும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை சமீபத்தில் வெளியிட்டது.

HEADLINES
🔮Situation along LoC can escalate any time: Army Chief General Bipin Rawat.

🔮Five bowlers who could garner crores in the IPL auction.

🔮Donald Trump on brink of impeachment as House readies historic vote.

🔮Tamil writer Cho Dharman wins Sahitya Akademi award for his novel ‘Sool’

🔮India vs West Indies 2nd ODI Live Cricket Score Updates: Kuldeep Yadav gets hat-trick.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴