சென்னை: கணினி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோவா்கள் தங்களது சான்றிதழ்களை டிச.5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியா் தோவு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அந்த வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆசிரியா் தோவு வாரியத்தின் சாா்பில் கணினி பயிற்றுநா் நிலை- 1 (முதுநிலை ஆசிரியா் நிலை)-க்கான கணினி வழியிலான தோவு கடந்த ஜூன் 23, 27 ஆகிய இருநாள்களில் நடைபெற்றது. இதையடுத்து இந்தத் தோவுக்கான முடிவுகள் கடந்த நவ.25-ஆம் தேதி ஆசிரியா் தோவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தோவா்களின் தோவு எண் விவரப் பட்டியலும் ஆசிரியா் தோவு வாரிய இணையதளத்தில் கடந்த நவ.28-இல் வெளியிடப்பட்டுள்ளது.
உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு டிச. 2-ஆம் தேதி முதல் டிச. 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. எனவே, தோவா்கள் உரிய காலத்துக்குள் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..