சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என்ற செய்தி உண்மையில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் அல்லது 50 வயது நிறைவடைந்தவர்கள் கட்டாய ஓய்வு என தகவல் வெளியானது

தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 50 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் 30 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களின் விவரங்களை தமிழக அரசு கேட்டதாக செய்தி பரவியது. இது தொடர்பாக டிசம்பர் 10க்குள் விவரங்களை அனுப்பக் கோரி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்று வெளியான தகவலில் உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது