👆👆👆👆👆👆👆👆

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள் எண்- 461

அதிகாரம் : தெரிந்து செயல்வகை

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் 
 ஊதியமும் சூழ்ந்து செயல்.

பொருள்:

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

நாம் கற்றோரின் அறிவுரைகளைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பிறகு நாம் படித்த நூல்களிலிருந்து பெற்ற நல்லறிவை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

A cat may look at a king.

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Guess - ஊகம்
2. Guild - சங்கம்
3. Gulf - வளைகுடா
4. Guile - துரோகம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. எந்த நாட்டில் அணு துளைக்காத பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது ?

உருசியா

2. மன்னிப்பு என்பது எந்த மொழிச் சொல்லாகும் ?

உருது


✡✡✡✡✡✡✡✡
Daily English

1. My sisters dress is pink in colour.
2. The children walked across the road.
3. Put the ladder against the wall.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

ஜாதிக்காய் 

🍅 ஜாதிக்காய் இந்தோனேஷியாவின் மொலுக்காஸ் அல்லது ஸ்பைஸ் தீவுகளில் உள்ள பான்டா தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்டவை. 

🍅 மிரிஸ்டிகா ஃபிராக்ரன்ஸ் என்ற இனத்தைச் சேர்ந்த பசுமையான இம்மரமானது, வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

🍅ஜாதிக்காய் மலேசியா போன்ற நாடுகளில் இயற்கையாக வளர்கின்ற மரமாகும்.இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகின்றது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

வழக்கு

ஒரு முறை முல்லாவுக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. முல்லாவிற்கு பல மனைவிகள் இருப்பதாகக் குற்றச்சாட்டு. ஆனால் அதை நிரூபிக்க எந்தவித ஆதாரமும் இல்லை. 

முல்லாவின் வழக்கறிஞர், நீங்கள் அமைதியாகவே இருங்கள். ஒரு வார்த்தைக் கூட பேசாதீர்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். முல்லாவும் அப்படியே அமைதியாக இருந்தார். 

முல்லாவின் வழக்கை விசாரித்த நீதிபதி, சாட்சிகள் இல்லாததால் உன் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம், என்றார். அதுவரை அமைதியாக இருந்த முல்லா, வழக்கில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நீதிபதி அவர்களே..! நான் எந்த வீட்டுக்கு போவது? என்று கேட்டார். 

நீதி :
தவளை தன் வாயால் கெடும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮தேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கான வழிகாட்டுதல்: பரீட்சா பே சர்ச்சா 2020-ல் பிரதமர் மோடி இன்று உரை.

🔮சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9000 ரன்கள் என்ற மைல்கல்லை ரோகித் சர்மா எட்டியுள்ளார்.

🔮அமெரிக்காவில் நியூயார்க் நகரை புயலில் இருந்து காக்க சுவர் எழுப்புவது முட்டாள்தனமானது என அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

🔮மக்களை சந்தித்து பேச மத்திய மந்திரிகள் குழு காஷ்மீர் சென்றது.

🔮தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை:

HEADLINES

🔮All Afghans have been persecuted, says Hamid Karzai.

🔮Indian school teacher in Shenzhen becomes first foreigner to contract coronavirus in China.

🔮J&K a 'jewel' of country, Centre will soon come out with industrial package for UT: Piyush Goyal.

🔮Over 5 crore people participate in human chain organised by Bihar CM Nitish Kumar.

🔮Airports in Tamil Nadu put on alert to tackle Coronavirus.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴