👆👆👆👆👆👆👆👆

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 1045

அதிகாரம் : நல்குரவு

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் 
 துன்பங்கள் சென்று படும்.

பொருள்:

வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

வண்டுகள் மல்ரில் உள்ள தேனை உறிஞ்சுகின்றன. அது போல உங்கள் நூல்களில் உள்ள கருத்துக்களை மனதில் நிரப்புங்கள்.
 -அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
1. All men cannot be masters.

1. எல்லா மனிதரும் ஞானிகள் அல்ல.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Habitation - குடியிருக்கும் இடம்
2. Hag - விகாரமான கிழவி
3. Hail -  வாழ்த்து கூறு
4.  Hammer - சுத்தியல்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர் யார் ?

 சேக்கிழார்

2. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என அழைக்கப்படும் நகரம் எது ?

 மதுரை

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. India won a gold medal in archery.
2. Raju has to improve in the area of geometry.
3. We should arise for the national anthem.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

எள்

🌾 இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவாகும்.

🌾 எள்ளில், கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் என இரு வகைகள் உள்ளன.

🌾 எள்ளானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்க்கப்பட்ட செடியாகும். 

🌾 பின்னர் பல நாடுகளும் பயிரிட ஆரம்பித்தன.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

மன்னிப்பு

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் ஒரு நாள் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த முல்லா, தலைவரைப் பார்த்து என்ன கழுதை உடன் நடைப்பயிற்சி போய் கொண்டிருக்கிறீர்கள்? என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.

இது என்னுடைய நாய். உனக்கு கண் சரியாகத் தெரியவில்லையா? என்றார். அதற்கு முல்லா அது நாய் என்று எனக்குத் தெரியும். நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம் என்றார். சிறிது நேரம் கழித்து தலைவருக்கு தன்னைத்தான் கழுதை என்று முல்லா சொல்கிறார் என்பது புத்திக்கு எட்டியது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில், முல்லா தன்னை கழுதை என்று சொல்லியதை எண்ணி வெகுண்டு எழுந்தார்.

முல்லாவின் மீது தலைவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு. ஆகையால் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா என்றார். நீதிபதி கேளுங்கள் என்றார். ஐயா சட்டத்தில் நான் கழுதையை தலைவா என்றழைப்பதில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா? என்று கேட்டார்.

இல்லை என்றார் நீதிபதி. சரி என்ற முல்லா அந்த தலைவரிடம் சென்று தலைவா என்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮தூத்துக்குடியில் ரூ.40,000 கோடி செலவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

🔮ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

🔮தஞ்சை விமானப்படை தளம் தரம் உயர்வு; சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானம் இணைப்பு.

🔮176 பேரை பலி கொண்ட உக்ரைன் விமான விபத்து தொடர்பான கருப்பு பெட்டியை உக்ரைன் அல்லது பிரான்சிடம் ஒப்படைக்க கோரி கனடா அரசு ஈரானை வலியுறுத்தியுள்ளது.

🔮நிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி: தூக்குத்தண்டனை உறுதி.

🔮இளைஞர் உலக கோப்பை இலங்கையை வீழ்த்தியது இந்தியா யு-19.

HEADLINES

🔮Supreme Court throws out Nirbhaya gang rape convict’s plea.

🔮Andhra Pradesh Cabinet clears decentralised capital across Amaravati, Visakhapatnam and Kurnool.

🔮One nation one ration card scheme: 12 states to get direct benefits.

🔮Bag with explosive substance found at Mangaluru airport

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴