👆👆👆👆👆👆👆👆

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 464

அதிகாரம் : தெரிந்து செயல்வகை

 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் 
 ஏதப்பாடு அஞ்சு பவர்.

பொருள்:

களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும். 
 -ஜார்ஜ் பெர்னாட்ஷா

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

First try and then trust.

முயற்சி திருவினையாக்கும்.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Mariner - மாலுமி
2. Mark - ஜெர்மன் நாட்டு நாணயம்
3. Marshal - தளபதி
4. Mart - சந்தை

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர் யார் ?

 கார்ல் மார்க்ஸ்

2. தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்படும் நாள் எது ?

 நவம்பர் 19

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. All children should balance work and play.
2. My mother baked a cake for my birthday.
3. My sister has a bag with Tom and Jerry picture on it.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

திப்பிலி

திப்பிலி எனும் பல பருவத்தாவரமானது பைபிரேசியே (Piperaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் கொடி ஆகும். 

இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது அதிகமாக பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது. பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.

திப்பிலி பல மிகச்சிறிய பழங்களை கொண்டது. அவை கூர்முனைக் கொம்பு போன்ற ஒரு பூவின் மேற்பரப்பில் நெருக்கமாக பதிக்கப்பட்டிருக்கும்.

திப்பிலி ஓர் முக்கியமான மற்றும் நன்கு அறியப்பட்ட மசாலாவாக திகழ்கிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

பத்தாவது பாஸ்

நாதஸ்வரம் மற்றம் மேளதாளத்துடன் பாண்டித்தேவரும் அந்த கிராமத்து மக்களும் மந்தை வெளியில் காலை பஸ்ஸீக்காக காத்துக் கிடந்தனர். மதுரையிலிருந்து வரும் பஸ் அங்குதான் வந்து நிற்கும். அதில்தான் பத்தாவது பாஸ் ஆன பாண்டித்தேவரின் மகன் ரகு வருவான்.
அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். பஸ் வந்து நின்றது.பஸ்ஸிலிருந்து ரகு இறங்கினான். அடுத்த வினாடி நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. பாண்டித் தேவர் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார்.
ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.ரகுவின் அம்மா பேச்சியம்மா வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்தாள்.தான் பரிட்சையில் தேறவில்லை என்பதை எப்படிச் சொல்வது?“பாஸ் பண்ணிட்டியாப்பா” என்றாள் அம்மா
“ஆமாம்மா பாஸாயிட்டேன்” ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.
“என்னா தம்பி மேல படிக்கப் போறீயா?”“ஆமாம்”“டாக்டருக்குப் படிக்கப் போறியாமே”“ஆமாம்”“இப்போ எப்படி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா?”
இப்படி ஆளுக்கு ஆள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர்இவனும் ஓயாமல் பொய் சொன்னான்.“ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும்” என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடித்துக் கொண்டு வந்தனர்.ரகு பத்தாவது பாஸ் செய்தால் மொட்டை போடுவதாக பிரார்த்தனையாம். ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பயந்தான்.
அடுத்த நாள் இவன் பயந்தது போலவே இன்னொரு விஷயம் நடந்தது. பாண்டித் தேவர் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். இவனை காலேஜில் சேர்ப்பதற்கான ஏற்பாடாம்.பாண்டித்தேவர் வசதியானவர் என்று சொல் முடியாது. இவனை காலேஜில் படிக்க வைக்கக் கூட நிலத்தை விற்றுத்தான் செலவு செய்ய திட்டமிட்டிருந்தார்.
ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள். இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று உணர்ந்து விட்டான் ரகு.
அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்தான்.இருவரையும் ஒருசேர நிற்கவைத்தான். இருவரின் கால்களிலும் விழுந்தான் ரகு.“என்ன என்ன?” என்று பதட்டம் அடைந்தார் பாண்டித்தேவர்.
“நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தவறிய உண்மையை மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லி குலுங்கிக் குலுங்கி அழுதான்.ரகுவின் அப்பாவும் அம்மாவும் ஒரு கணம் செய்வது அறியாமல் மலைத்து நின்றனர்.
பின்னர் பாண்டித்தேவர் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டார்.“பாண்டித் தேவர் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார் பாண்டித்தேவர்.
“இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன்” என்று தந்தையின் கையில் அடித்து ஊறுதி சொன்னான் ரகு.பாண்டித்தேவருக்குப் பெருமையாக இருந்தது.அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வருகை தரும்படி முதல் அமைச்சர் பழனிசாமிக்கு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

🔮குரூப்-4 தேர்வை ஒட்டு மொத்தமாக ரத்து செய்வது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

🔮சுகாதாரத்துறையை பொது பட்டியலுக்கு மாற்றுவது தொடர்பாக மத்திய அரசிடம் கருத்துரு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது; கண்டிப்பாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

🔮கொரோனா வைரசை கணிக்கத் தவறி விட்டோம் என்று உலக சுகாதார அமைப்பு முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

🔮ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.


🔮டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்: அறுவடை பணி தீவிரம்.

HEADLINES

🔮14-day quarantine mandatory for Indians evacuated from China: Indian Embassy.

🔮Indian environmental economist Pavan Sukhdev wins Tyler Prize for 'green economy' work.

🔮No problem with PCB hosting Asia Cup, but India won't play in Pakistan: BCCI.


🔮U.S. air crash in Afghanistan may have killed top CIA official: Iranian media.

🔮CHENNAI ,Those dumping medical waste into lakes must be dealt with seriously, says National Green Tribunal.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴