காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
29-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 503

அதிகாரம் : தெரிந்து தெளிதல்

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

 இன்மை அரிதே வெளிறு.

பொருள்:
அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

இரண்டு பக்கம் கூர்மையாக உள்ள கத்தியை கவனமாக கையாள வேண்டும். இதே மாதிரி எந்தப் பக்கமும் சேரக்கூடிய மனிதர்களோடு மிகவும் ஜாக்கிரதையாக பழக வேண்டும்.
 - கண்ணதாசன்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி 

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

ZODIAC-ராசி

1. Sagittarius - தனுசு
2. Capricorn - மகரம்
3. Aquarius - கும்பம்
4. Pisces - மீனம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.ஆங்கில உயிர் எழுத்துக்கள் ஐந்தும் இடம் பெறும் மிகச் சிறிய வார்த்தை எது?

 Education

2. மீனின் இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன?

 மூன்று

✡✡✡✡✡✡✡✡
Daily English
1. The police found the body in a river.
2. Many strange plants and fish live on the sea bed.
3. The beggar usually sits on the pavement.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

பட்டுப்புழு





🐛 முதன்முதலில் சீனாவில் தான் பட்டு இழைகளைக் கொண்டு ஆடை தயாரித்தார்கள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே இரகசியமாக வைக்கப்பட்டது.

🐛 ரோமானியர்கள் எவ்வளவு முயன்றும் இதன் இரகசியத்தை அறிய முடியவில்லை. அதன் பின் ஜப்பானியர்கள் இதனை தெரிந்து கொண்டு, ப‌ட்டு நூல் வ‌ள‌ர்ப்பைத் துவக்கி, அதன் உற்பத்தியில் மேம்பாடு கண்டு சீனாவின் உற்பத்தியை விடப் பன்மடங்கு உற்பத்தி செய்தார்கள்.

பின்னர் ஜப்பான் பட்டு நெசவு வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும், சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

இரண்டு தண்டவாளங்கள்

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது. மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும். ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது. தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.

உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது. நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்? உண்மையாக நாம் என்ன செய்வோம்…? ஒரு குழந்தை விளையாடும் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம். ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார். உண்மை தான் என்றோம். இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பாற்றபடுகிறது.


ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது. இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது. இன்றைய நிலை நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான். தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮ஐநா மனித உரிமைகள் பேரவையின் 43-வது அமர்வில் பாகிஸ்தானுக்கு இந்தியா 10 அம்ச ஆலோசனைகளை வழங்கி உள்ளது.

🔮அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

🔮மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.இதனால் அங்குள்ள இந்தியர்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

🔮தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

🔮பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்ததோடு அரைஇறுதிக்கும் முன்னேறியது.


🔮மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்...: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

🔮கோதாவரியில் இருந்து காவிரி கடைமடைக்கு உபரி நீர் கொண்டு செல்லும் விரைவில் செயல்படுத்தப்படும் :மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

HEADLINES

🔮GDP growth slips to 4.7% in third quarter compared to 5.6% in previous year.

🔮Madras High Court in the process of getting child-friendly chambers, says Chief Justice Sahi.

🔮Centre committed to individual, judicial and media freedom: Ravi Shankar Prasad on HC judge transfer.


🔮Seventeen new planets, including one Earth-sized habitable world discovered.


Join Telegram& Whats App Group Link -Click Here