நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கரோனாவுக்கு 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் இதுவரை 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவை தடுக்க ஏற்கெனவே நாடு முழுவதும் கல்லூரிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..