அரசு கலை கல்லூரிகளில் ' ஆன்லைனில் ' சேர்க்கை

தனியார் கல்லூரிகளை போல , அரசு கலை கல்லூரிகளிலும் , ஆன்லைன் முறையில் , மாண வர் சேர்க்கையை நடத்த , உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது . தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகள் , சுயநிதி பல்கலைகள் போன்றவற்றில் , முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை , ஆன் லைன் முறையில் நடத்தப்படுகிறது .

 அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் , தமிழக உயர்கல்வி துறையின் சார்பில் , கவுன்சிலிங் நடத்தி மாணவர்கள் சேர்க் கப்படுகின்றனர் . தனியார் கலை கல்லுாரிகளிலும் , ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது . இதேபோல , அரசு கலை , அறிவியல் கல் லூரிகளிலும் , ஆன்லைன் முறையில் , மாண வர் சேர்க்கையை நடத்த , உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது . முதற்கட்டமாக , சென்னை , மதுரை , திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கலை , அறிவியல் கல்லுாரிகளில் , ஆன்லைனில் விண் ணப்ப பதிவை அறிமுகம் செய்ய , உயர்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது . விரைவில் , இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என , உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன .

Join Telegram& Whats App Group Link -Click Here